ஐபிஎல் 2023: 13 வீரர்களை மொத்தமா கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ்..!
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்திற்கு முன் 13 வீரர்களை விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை இன்று சமர்ப்பித்தது.
5 முறை சாம்பியனும், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பாக 13 வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸின் மேட்ச் வின்னராக கடந்த 13 ஆண்டுகளாக திகழ்ந்த கைரன் பொல்லார்டை விடுவிக்கும் நிலை உருவானது. ஆனால் அவரே ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார். அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள், கையிருப்பில் இருக்கும் தொகை..! முழு விவரம்
கைரன் பொல்லார்டை தவிர, மேலும் 12 வீரர்களை விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த சீசனில் பெரிதாக சோபிக்காத ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ், ஆடும் லெவனில் பெரிதாக ஆட வாய்ப்பு கொடுக்க முடியாத ஃபேபியன் ஆலன், ரைலீ மெரிடித், டைமல் மில்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ஆர்யன் ஜுயால், பாசில் தம்பி, அன்மோல்ப்ரீத் சிங், சஞ்சய் யாதவ், ராகுல் புத்தி ஆகிய உள்நாட்டு வீரர்கள் என மொத்தம் 13 வீரர்களை விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஆர்சிபி அணியிடமிருந்து ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:
கைரன் பொல்லார்டு, அன்மோல்ப்ரீத் சிங், ஆர்யன் ஜுயால், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரைலீ மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.
13 வீரர்களை விடுவித்த மும்பை இந்தியன்ஸிடம், அடுத்த சீசனுக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் ரூ.5 கோடியுடன் சேர்த்து ரூ.20.55 கோடி கையிருப்பில் உள்ளது.