ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஊர்வசி ரவுத்தலா!
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபானி அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் கோகிலாபென் மருத்துவமனையின் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரிஷப் பண்ட் சென்ற கார் டெல்லி - டேராடூன் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்த நிலையில், டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்த்ரோஸ்கோபி, தோள்பட்டை சேவையின் இயக்குநர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவின் நேரடி மேற்பார்வையில் இருக்கிறார். மேலும், அறுவை சிகிச்சை மற்றும் தசைநார் கிழிதலுக்கான பரிசோதனை என்று அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார். ரிஷப் பண்ட் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பிசிசிஐ மருத்துவ குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா?
இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா, தற்போது ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிடுந்தார். இன்று அவர் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்திருப்பது, அவரை நேரில் சென்று பார்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தலா இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!