Asianet News TamilAsianet News Tamil

அப்படியே ஐபிஎல்லை நடத்தினாலும், இப்படித்தான் நடத்தப்படும்.. கங்குலி அதிரடி

கொரோனா உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், ஐபிஎல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 
 

bcci president ganguly speaks about possible of ipl 2020 amid corona virus
Author
India, First Published Mar 16, 2020, 10:19 AM IST

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகிவருவதால், கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. 

bcci president ganguly speaks about possible of ipl 2020 amid corona virus

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. கொரோனா பாதிப்பின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இப்போதைக்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டதாகவே இருக்கட்டும். பின்னர் நிலைமையை கருத்தில்கொண்டு முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பிலும் அணி உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

bcci president ganguly speaks about possible of ipl 2020 amid corona virus

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம் என்பதில் ஐயமில்லை. 

bcci president ganguly speaks about possible of ipl 2020 amid corona virus

Also Read - அடடா... இதல்லவா அதிரடி பேட்டிங்.. கிறிஸ் லின்னின் காட்டடி சதம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சூப்பர் போட்டி

ஆனால் கொரோனாவின் தீவிரம் குறைந்து, சற்று தாமதமாக போட்டிகளை தொடங்க நேரிட்டால், குறைவான போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ஒருவேளை ஐபிஎல் நடத்தப்பட்டால், போட்டிகள் குறைத்து நடத்தப்படலாம். ஐபிஎல் தொடர் எந்த மாதிரி சுருக்கப்படும், எத்தனை போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது என்று கங்குலி தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios