#ICCWTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஃபைனலில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் களமிறங்குகிறது. ரோஹித், கில் தொடக்க வீரர்கள். புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆடுகிறார்.
ஸ்பின் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் ஆடுகிறார்கள். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுகிறார்கள்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.