Asianet News TamilAsianet News Tamil

#IPL மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள்..!

ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

aakash chopra opines which 4 players mumbai indians could retain for ipl 2022
Author
Chennai, First Published Jul 12, 2021, 3:11 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர்  19 முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும். 

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய 5 சீசன்களிலும் ஐபிஎல் டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ், அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணி ஆகும்.

இந்நிலையில், ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக, ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 3 இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர் ஒருவராக பொல்லார்டு என மொத்தம் 4 பேரையும் தக்கவைக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் ஆர்டிஎம்(Right To Match)-ஐ குயிண்டன் டி காக்கிற்கு பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios