Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG கடைசி 2 டெஸ்ட்டில் அணியில் இணையும் 3 முக்கியமான வீரர்கள்..!

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் 3 முக்கியமான வீரர்கள் இணைகிறார்கள்.
 

3 england players will be joined in squad for last 2 test matches against india
Author
Chennai, First Published Jan 30, 2021, 9:36 PM IST

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆடவுள்ளது. முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளது.

ஓராண்டு முழுவதும் வீரர்கள் முழு ஃபிட்னெஸுடன் ஆட வேண்டும் என்பதால், இங்கிலாந்து அணியில் வீரர்கள் சுழற்சி முறையில் எடுக்கப்படுகின்றனர். அந்தவகையில், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாத ஜானி பேர்ஸ்டோ, மார்க் உட், சாம் கரன் ஆகிய மூவரும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

3 england players will be joined in squad for last 2 test matches against india

ஜானி பேர்ஸ்டோ 2வது டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணியில் ஆடுவார் என்று அந்த அணியின் பேட்டிங் துணை பயிற்சியாளர் க்ரஹாம் தோர்பே தெரிவித்திருந்தார். அந்த தகவலில் உண்மையில்லை என்றும், 3வது டெஸ்ட்டில் தான் பேர்ஸ்டோ அணியில் இணைகிறார் என்றும் தெளிவுபடுத்தியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கடைசி 2 டெஸ்ட்டில் ஆல்ரவுண்டர் சாம் கரன் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் ஆடுவதையும் உறுதி செய்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Follow Us:
Download App:
  • android
  • ios