காதல் திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சில ஜோதிட பரிகாரங்களை முயற்சி செய்யலாம். இதனால் உங்கள் விருப்பத்தின் படி திருமணம் நடக்கும், உங்கள் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் உள்ள 16 சடங்குகளில் ஒன்றாகும். ஆனால் உறவில் நிறைய காதல் ஏற்பட்ட பிறகும், சில சமயங்களில் திருமணத்தில் பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன. எனவே, இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய துணையை மணக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் காதல் திருமணம் செய்ய விரும்புவோர் பண்ண வேண்டிய எளிய பரிகாரங்களை பற்றி இங்கு காணலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அன்னை பார்வதி வழிபாடு:
செவ்வாய் முதல், மா பார்வதி சுயம்வர மந்திரத்தை குறைந்தது 108 முறை உச்சரிக்க வேண்டும். முடிந்தால், இந்த மந்திரத்தை ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் 1008 முறையும், மீதமுள்ள நாட்களில் 108 முறையும் ஜபிக்கலாம்.

மகாதேவருக்கு அபிஷேகம்:
காதல் திருமணம் வெற்றிபெற, மகாதேவருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பழச்சாறு அபிஷேகம் செய்ய வேண்டும் மற்றும் அபிஷேக நேரத்தில் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

கிருஷ்ணர் தொடர்பான பரிகாரங்கள்:

கிருஷ்ணர் மற்றும் ராதா ராணிக்கு புல்லாங்குழல் மற்றும் வைஜயந்தி மாலையை வழங்குங்கள். இந்த பரிகாரத்தை ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி திதிகளிலும் செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரு ஸ்லோகி பகவத் சொல்லுங்கள்.

இதையும் படிங்க: மரணம் உங்களை விட்டு ஓட...நீங்க நல்ல ஆயுசுடன் வாழ...இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்க!

மங்கள கௌரி விரதம்:

மங்கள கௌரி விரதமும் மிகுந்த பலன் தரும். காதல் திருமண வெற்றிக்கு 23 மங்கள கௌரி விரதத்தை சடங்குகளுடன் செய்ய வேண்டும். செவ்வாய் கிழமையில் முடிந்தால் அன்னதானம் செய்யவும், அது இன்னும் சிறந்தது மற்றும் காதல் திருமணத்திற்கு உதவுகிறது. இந்த ஜோதிட பரிகாரங்களை வைத்து நீங்களும் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.