ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதாவது 2016-க்கு பிறகு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பணமாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் ஆண்ட கட்சியான திமுகவையும் ஓரங்கட்டி ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தேறியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் மீண்டும் அதிமுக பழைய ஃபார்முக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சிக்கான அக்னிப் பரீட்சை என்ற கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பது கவுரவ தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை ஒரு உத்தியாகவே வைத்திருக்கிறார்கள். கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அத்தி பூத்தாற்போலவே வெற்றி பெற்றது நடத்திருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் துறைமுகம் (1989), மங்களூர் (2004) ஆகிய இடைத்தேர்தல்களில் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. இதேபோல கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நத்தம் (2000) தொகுதியில் மட்டுமே எதிர்கட்சி வெற்றி பெற்றது. இந்த இரு ஆட்சிக் காலத்திலும் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் 10 முதல் 15 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகின்றன.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதாவது 2016-க்கு பிறகு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பணமாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் ஆண்ட கட்சியான திமுகவையும் ஓரங்கட்டி ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற அதிசயம் நடந்தேறியது. இதேபோல 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதிகளில் நடந்த இடைத்தே எதிர்க்கட்சியான திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று கெத்து காட்டியது. ஆளுங்கட்சியான அதிமுக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

