MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சமூகநீதியா..? சவப்பெட்டியா..? ஸ்டாலினை அதிரவைக்கும் நாடார் சங்க போஸ்டர்..!

சமூகநீதியா..? சவப்பெட்டியா..? ஸ்டாலினை அதிரவைக்கும் நாடார் சங்க போஸ்டர்..!

தென் தமிழகத்தில் சாதி மோதல்களைக் கையாளத் தெரியாமல் விழிக்கும் ஸ்டாலின் அரசுக்கு, இந்தப் போஸ்டர்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவை 2026-ல் வரப்போகும் வீழ்ச்சிக்கான முன்னெச்செரிக்கை என்கிறார்கள்

1 Min read
Author : Thiraviya raj
Published : Mar 07 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வார்த்தையில் மட்டுமே சமூக நீதி
Image Credit : Asianet News

வார்த்தையில் மட்டுமே சமூக நீதி

தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’ என்று முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்த திமுக-வுக்கு, இப்போது தென் தமிழகத்தின் கோபம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நாடார் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி, இன்று சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம் என எங்கு பார்த்தாலும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினைக் கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றன.

''வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியைக் காப்பாற்றுவேன் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் சாதிய ரீதியாக நடைபெறும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஏன்?" என அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தென் மாவட்டங்களில் சாதி மோதல்களும், அதனால் நிகழும் படுகொலைகளும் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன என்பது ஒருபுறம் இருக்க, நாடார் இன மக்களுக்குப் போதிய பாதுகாப்பும், தகுதியான அரசியல் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
புறக்கணிக்கப்படுகிறதா நாடார் சமூகம்?
Image Credit : x

புறக்கணிக்கப்படுகிறதா நாடார் சமூகம்?

தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூகத் தூண்களாக விளங்கும் நாடார் இன மக்கள், திமுக ஆட்சியில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். குறிப்பாக, சாதி மோதல்களின் போது காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், ஆளுங்கட்சியின் சில முக்கியப் புள்ளிகள் இந்த மோதல்களைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Related Articles

Related image1
60 தொகுதிகளில் செக்...! அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!
33
தேர்தல் களத்தில் பாதிப்பு?
Image Credit : X/@arivalayam

தேர்தல் களத்தில் பாதிப்பு?

தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாடு நாடார் சங்கம் எடுத்துள்ள இந்த நேரடி மல்லுக்கட்டும் நடவடிக்கை திமுக-வின் ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டையைப் போடும் என்பதில் சந்தேகமில்லை. 'சமூகநீதி' என்ற ஒற்றை வார்த்தையை வைத்துப் பிழைப்பு நடத்தும் திமுக-வுக்கு, கள நிலவரமோ வேறாக இருக்கிறது என்கிறார்கள் நாடார் சமுதாய பிரதிநிதிகள்.

தென் தமிழகத்தில் சாதி மோதல்களைக் கையாளத் தெரியாமல் விழிக்கும் ஸ்டாலின் அரசுக்கு, இந்தப் போஸ்டர்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவை 2026-ல் வரப்போகும் வீழ்ச்சிக்கான முன்னெச்செரிக்கை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
Recommended image2
TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!
Recommended image3
Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
Related Stories
Recommended image1
60 தொகுதிகளில் செக்...! அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved