Asianet News TamilAsianet News Tamil

Uma Bharti : லோதி சமூக ஓட்டை கைப்பற்றும் உமா பாரதி.. பாஜகவில் விரிசல் - மத்திய பிரதேசத்தில் திடீர் ட்விஸ்ட்!

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 

Why Uma Bharti is challenging BJP leadership in Madhya Pradesh again
Author
First Published Jan 1, 2023, 6:36 PM IST

மத்திய பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லோதி சமூகம் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான உமாபாரதி மீண்டும் சில நாட்களாக ஆக்டிவாக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார்.

உமா பாரதி, போபாலில் லோதி சமூக கூட்டத்தில் உரையாற்றும் போது, தான் ஒரு விசுவாசமான பிஜேபி சிப்பாய் என்றும், கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களை தொடர்ந்து கேட்பேன் என்றும் கூறினார்.  இந்த கூட்டம் டிசம்பர் 25 அன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.  கூட்டத்தில் உமா பாரதி பேசிய வீடியோ டிசம்பர் 28 அன்று வைரலானது. அதில், நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Why Uma Bharti is challenging BJP leadership in Madhya Pradesh again

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

நான் எனது கட்சியின் விசுவாசமான சிப்பாய் என்பதால் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கூறுகிறேன். நீங்கள் கட்சியின் விசுவாசமான சிப்பாயாக இருக்க வேண்டும் என்று நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். நீங்கள் கட்சிக்காரராக இல்லாவிட்டால், நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று பொதுப்படையாக கூறினார்.

மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், அவரது எம்.எல்.ஏ சகோதரர் ஜலம் சிங் படேல் மற்றும் லோதி சமூகத்தைச் சேர்ந்த பல பாஜக தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். லோதி சமூகத்தினர் ம.பி.யில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த ஓபிசி சமூகத்தினர் ஆவார்கள்.

இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

Why Uma Bharti is challenging BJP leadership in Madhya Pradesh again

தற்போதைய பிஜேபி தலைவர் ப்ரீதம் லோதி, பிராமணர்களுக்கு எதிரான கருத்துக்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, சமீபகாலமாக, ம.பி.யில் லோதி சமூகத்தினருக்கும், பிராமணர்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. முக்கியமாக உமாபாரதி மற்றும் பிரஹலாத் படேல் கட்சியுடன் இணைந்திருப்பதால் லோதிகள் பாஜக ஆதரவாளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது உமா பாரதி கையில் எடுத்துள்ள சாதி மற்றும் சமூகம் சார்ந்த அறிக்கை தேர்தல் அரசியலில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவத்தை தந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இன்னும் ஓராண்டுக்குள் ம.பி.யில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சியான காங்கிரஸின் தாக்குதல்களை மட்டுமின்றி, அவரது சொந்தக் கட்சியான உமா பாரதியிடம் இருந்தும் போராட வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

Follow Us:
Download App:
  • android
  • ios