மே மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியும் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியும் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியும் அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி ஏபிபி - சிவோட்டர் இணைந்து இந்த மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தின. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியே தொடரும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 154 முதல் 162 இடங்களில் வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பாஜக 98-106 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 26-34 இடங்களை மட்டும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.