Asianet News TamilAsianet News Tamil

இப்போ எங்கே போனார் அந்த ரஜினி... எங்கே போனார் ராமதாஸ்..? இஸ்லாமியர்களுக்கு ஆபத்து , கூப்பிடுங்கள் அவர்களை...

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் ,  எங்கே.?  தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே.?

where is that rajini, where is that ramadoss - call them , Muslim's have danger zone - mp sendhilkumar says
Author
Chennai, First Published Feb 26, 2020, 5:54 PM IST

டெல்லி பற்றி எரிகிறது ,  இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள் ,  இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதல் ஆளாய் வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் எங்கே..?  ராமதாஸ் எங்கே..?? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் .  டெல்லியில் நடந்த கலவரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் . திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது . போராட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாத நிலையில் வட கிழக்கு டெல்லியில்  மாஜ்பூர்  ,  ஜெபாராபாத் ,  சீலாம்பூர் என பல்வேறு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட  மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் . 

where is that rajini, where is that ramadoss - call them , Muslim's have danger zone - mp sendhilkumar says 

கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் கலவரத்தில் கடைகள் ,  கார்கள்,  என கண்ணில் பட்டவைகளை  எல்லாம் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கி வருகின்றனர் பொருட்களை அடித்தும் உடைத்தும் கொளுத்தியும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தி வருகின்றனர் .  இதில் பொதுமக்களும்  அதிகளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர் கலவரத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்ல வரும்  ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  கலவர தடுப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் ரத்தன்லால் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்,   சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் . ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  மேலும் 5 பேர் இன்று காலை உயிரிழந்தனர் .  இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது .  

where is that rajini, where is that ramadoss - call them , Muslim's have danger zone - mp sendhilkumar says

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.   இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது இது நாடு முழுவதும் மிகுந்த பதற்றத்தையும்,  பாஜகமீது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   கலவரத்திற்கு பாஜகவே  முழு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் செந்தில்குமார் டெல்லியில்இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள் . இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் ,  எங்கே.?  தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே.?  இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி  எங்கே என அவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.  

where is that rajini, where is that ramadoss - call them , Muslim's have danger zone - mp sendhilkumar says

அவரின் விமர்சனத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .  சமீபத்தில் இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  இந்திய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு  எந்த பாதிப்பும் வராது ,  அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக நான் வீதிக்கு வருவேன் என கூறியிருந்தார் .  அதே கருத்தை பாமக நிறுவனத் தலைவர் ராமதாசும்  தெரிவித்திருந்த நிலையில் எம்பி செந்தில்குமார் அவர்களை குறிவைத்து டிவிட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios