இப்போ எங்கே போனார் அந்த ரஜினி... எங்கே போனார் ராமதாஸ்..? இஸ்லாமியர்களுக்கு ஆபத்து , கூப்பிடுங்கள் அவர்களை...
இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் , எங்கே.? தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே.?
டெல்லி பற்றி எரிகிறது , இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள் , இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதல் ஆளாய் வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் எங்கே..? ராமதாஸ் எங்கே..?? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் . டெல்லியில் நடந்த கலவரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் . திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது . போராட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாத நிலையில் வட கிழக்கு டெல்லியில் மாஜ்பூர் , ஜெபாராபாத் , சீலாம்பூர் என பல்வேறு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் கலவரத்தில் கடைகள் , கார்கள், என கண்ணில் பட்டவைகளை எல்லாம் அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கி வருகின்றனர் பொருட்களை அடித்தும் உடைத்தும் கொளுத்தியும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தி வருகின்றனர் . இதில் பொதுமக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் கலவரத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்ல வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கலவர தடுப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் ரத்தன்லால் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் . ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேர் இன்று காலை உயிரிழந்தனர் . இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது .
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது இது நாடு முழுவதும் மிகுந்த பதற்றத்தையும், பாஜகமீது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலவரத்திற்கு பாஜகவே முழு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் செந்தில்குமார் டெல்லியில்இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள் . இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த் , எங்கே.? தொப்பி போடாத இஸ்லாமியர் ராமதாஸ் எங்கே.? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே என அவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் விமர்சனத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . சமீபத்தில் இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் , இந்திய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது , அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக நான் வீதிக்கு வருவேன் என கூறியிருந்தார் . அதே கருத்தை பாமக நிறுவனத் தலைவர் ராமதாசும் தெரிவித்திருந்த நிலையில் எம்பி செந்தில்குமார் அவர்களை குறிவைத்து டிவிட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்.