Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் இன்றும், நாளையும் என்னென்ன செய்கிறார்.. முழு விவரம் இதோ..

கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்றும், நாளையும் சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.  

What Stalin is doing today and tomorrow .. Here is the full details ..
Author
Chennai, First Published May 20, 2021, 10:07 AM IST

கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்றும், நாளையும் சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் அந்த பயணம் விவரம் வெளியாகி உள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு  சேலம் செல்கிறார். 

சேலத்தில் உள்ள இரும்பு ஆலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை பார்வையிடுகிறார். பிற்பகல் 12.15 மணிக்கு திருப்பூர் நேதாஜி அப்பேரல் பூங்காவிற்கு முதல்வர் செல்கிறார். அங்கு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.பின்னர் 1.30 மணிக்கு கோவை விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 

What Stalin is doing today and tomorrow .. Here is the full details ..

மாலை 5.15 மணிக்கு கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தோற்று சிகிச்சை வசதிகளை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தோற்று சிகிச்சை மையத்தியும் பார்வையிடுகிறார். இரவு 8.30 மணிக்கு மதுரை வரும் முதல்வர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 10.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 10.45 மணிக்கு தொப்பூர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். 11.30 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சி செல்கிறார். 

What Stalin is doing today and tomorrow .. Here is the full details ..

திருச்சி விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 5.00 மணிக்கு திருச்சி எம்.சி. மருத்துவமனைக்கு பெருந்தோற்று சிகிச்சை மையத்தை ஆய்வு செய்கிறார். மாலை 6.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இரவு 7.30 மணிக்கு திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு 8.15 மணிக்கு சென்னை வருகிறார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios