கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஓவராய் பேசிக் கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களாக ஸீனிலேயே இல்லை  கவனித்தீர்களா. எல்லாம் டெல்லி வெச்ச குட்டுதான். 

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஓவராய் பேசிக் கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களாக ஸீனிலேயே இல்லை கவனித்தீர்களா. எல்லாம் டெல்லி வெச்ச குட்டுதான். இன்னும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது தமிழகம். வரும் பொது தேர்தல் மூலம் தமிழகத்தில் அதிகார ரீதியில் கால் பதிக்க காத்திருக்கிறது பா.ஜ.க. இந்நிலையில், அவர்கள் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க.வின் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியின் தாறுமாறு பேச்சினால் கூட்டணியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவதை டெல்லியால் சகிக்க முடியவில்லை. 


ரா.பா.வின் ரவுசான வார்த்தைகளை பற்றி டெல்லிக்கு புகார் போக, அவர்கள் முதல்வரை அழைத்து ஸ்க்ரூ ஏற்ற, அவரோ ரா.பா.வை அழைத்து ‘கம்முன்னு இருங்க!’ என்று சொல்லிவிட்டார். இதுவே ராஜேந்திர பாலாஜியின் அமைதிக்கு காரணம். இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் இன்னொரு அமைச்சரும் டெல்லியின் கோவத்துக்கு ஆளாகி இருக்கிறார். அவர், சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்காமல் செய்தார்! எனும் புகாரினால் இவர் மீது பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே செம்ம கடுப்பில் உள்ளனர். ஏற்கனவே குட்கா விவகாரத்திலும், தொடர் ரெய்டு பிரச்னைகளிலும் இவர் தலை உருண்டு கிடப்பதாலும் பா.ஜ. இவர் மீது கடுப்பிலிருக்கிறது. 


அதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் துறையிலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீடுகள் இருப்பதாக அவரும் கடுப்பில் இருக்கிறார். ’நம்மளை வம்பிழுக்கிறதே விஜயபாஸ்கருக்கு வேலையா போச்சு!’ என்று கருவியிருக்கின்றனர். எனவே இருவருமே விஜய்பாஸ்கரைப் பற்றி, முதல்வரிடம் பெரிய புகார்ப்பட்டியலை வாசித்துள்ளனராம். முதல்வருக்கு அடுத்த அதிகார மையங்களான கொங்கு அமைச்சர்கள் இருவரையும் பகைத்துக் கொள்வது என்பது சாதுர்யமான அரசியல் இல்லை! என்று விஜயபாஸ்கரிடம் அவரது ஆட்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். 
என்னாகுதுன்னு பார்ப்போம்!