மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை... உதயநிதிக்காக வரிந்து கட்டும் வாயே திறக்காத பி.சி.ஸ்ரீராம்..!
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். சைகோ படத்தில் உதயநிதி நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளி வந்த படம் அது.
மழைக்காலத்தை நிறைவாக வென்றெடுப்பார் என்கிற நம்பிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு இருக்கிறது என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக சென்னையில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்தே இருக்கிறது. இதனால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். காய்கறிகள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் திமுக ஆட்சி மீது எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இது விடியல் அரசு அல்ல. வடியல் அரசு என பலரும் குமுறுகின்றனர்.
மழை நின்றும் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். ஆய்வின்போது ‘கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு மழைநீர் வடிகால் பணிகள் எதுவும் செய்யவில்லை’ என்று செய்தியாளர்களிடன் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இன்னொரு புறம் தமிழக அரசு சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மழை நீர் தேங்கியதற்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அரசியல்வாதிகள் தங்கள் சண்டைகளை மழை முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’நம் முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை வேலை செய்ய விடுங்கள். அரசியல் எல்லாம் பிறகு. நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இது போன்ற இன்னல்களை கடந்து வர இயலும். இவை முடிந்த பிறகு அரசியல்வாதிகள் தங்கள் சண்டைகளை வைத்துக் கொள்ளட்டும். அரசியல்வாதிகளின் உண்மையான குணம் நமக்கு தெரியும். அவர்கள் விளம்பரம் செய்து கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது’’ எனக் கூறியுள்ளார்.
எதற்குமே வாய்திறக்காத, தனது படங்கள் குறித்து பேட்டியளிக்காத பி.சி.ஸ்ரீராம் இப்போது மழை காரணமாக கருத்து தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளதாக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்களே அடுக்குகின்றனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். சைகோ படத்தில் உதயநிதி நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளி வந்த படம் அது. நிற்க, இந்த நிலையில் அவர் புதிதாக கருத்து பதிவிட்டுள்ளது திரையுலகினரையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது.