தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போர்ட்டம் நடத்தி வரும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று முடிவு  செய்ய உள்ளனர். தலைமைச் செயலாக ஊழியர்களும் அரசு ஊழியர்களுடன் இணைவது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர்.

பழையபென்ஷன்திட்டத்தைசெயல்படுத்தவேண்டும் என்பதுஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, அரசுஊழியர்கள், ஆசிரியர்கள்சங்கங்களின்கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, கடந்த  22 முதல்காலவரையற்றவேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம்தீவிரமாக தொடர்வதால், அரசுபள்ளிகள்மற்றும்பல்வேறுதுறைகளில், கல்விகற்பித்தல்மற்றும்அரசுநிர்வாகப்பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இன்று முதல் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இந்நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துதமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக்கழகபணியாளர்கள்சம்மேளனபொதுச்செயலர்பத்மநாபன்பேசும் போது, ஜாக்டோ - ஜியோகூட்டமைப்பினர்போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர். அவர்களின்போராட்டத்துக்குதமிழகஅரசுபோக்குவரத்துக்கழகஅனைத்துதொழிற்சங்கங்கள்முழுஆதரவைதெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்களின்போராட்டத்துக்குவலுசேர்க்கஆர்ப்பாட்டம்தர்ணாபோராட்டங்கள்நடத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி, காலவரையற்றபோராட்டம்நடத்துவதுகுறித்துஇன்றுசென்னைஎச்.எம்.எஸ்., அலுவலகத்தில்நடக்கும்போக்குவரத்துக்கழகதொழிற்சங்ககூட்டமைப்பின்அவசரகூட்டத்தில்முடிவுசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இதே போல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.