BREAKING திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடி மாற்றம்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!
நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்கள், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருவள்ளூர் கிழக்கு - திருவள்ளூர் மத்திய - திருவள்ளூர் மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. திருவள்ளூர் மத்திய மாவட்டம்
* ஆவடி
* பூவிருந்தவல்லி (தனி)
2. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
* கும்முடிப்பூண்டி
* பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
* திருத்தணி
* திருவள்ளூர்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
பொறுப்பாளர் - ஆவடி சா.மு.நாசர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
பொறுப்பாளர் - டி.ஜெ.கோவிந்தராஜன்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பொறுப்பாளர் - எம்.பூபதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.