Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி கார்ல CM-ன்னு ஒட்டியிருக்கிறதுக்கு காரணம் இதுதானாம்...! போட்டு தாக்கிய முன்னாள் அமைச்சர்...! 

This is the reason why car has joined the CM!
This is the reason why car has joined the CM!
Author
First Published Jan 29, 2018, 7:53 PM IST


தமிழக மக்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமியை CM ஆக மதிப்பதில்லை எனவும் அதனால் தான் அவரது காரில் தானாகவே CM என ஒட்டியிருக்கிறார் எனவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சி.எம். என்ற எழுத்துகளுடன் கூடிய பதிவெண் கொண்ட புதிய காரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அவரது புதிய வாகனத்தின் பதிவெண்ணில் சிஎம் என்ற ஆங்கில எழுத்துகள் வருகிறது. முதலமைச்சர் என்று பொருள் வரும்படியான பதிவெண்ணை முதலமைச்சருக்காக பிரத்யேகமாக மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

This is the reason why car has joined the CM!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புதிய காரின் பதிவெண் TN 07 CM 2233 என்று உள்ளதால், அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.அதே போன்று,இது அவருக்கு செண்டிமென்டாக இருக்கும் என  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தமிழக மக்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமியை CM ஆக மதிப்பதில்லை எனவும் அதனால் தான் அவரது காரில் தானாகவே CM என ஒட்டியிருக்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்று செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios