Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆட்சி நாங்க தான்..! கொக்கரிக்கும் மம்தாபானர்ஜி.! பாஜகவின் கனவு பலிக்காது.!

2021 சட்டமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் இருந்து பாஜகவை தூக்கி எறிவோம் என்று மம்தா பானர்ஜி சபதமெற்றுள்ளார் மம்தா பானர்ஜி.
 

The next government in West Bengal is Nanga ..! Mamta Banerjee is gathering! BJP's dream will not come true!
Author
Tamilnadu, First Published Jul 21, 2020, 10:22 PM IST

2021 சட்டமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் இருந்து பாஜகவை தூக்கி எறிவோம் என்று மம்தா பானர்ஜி சபதமெற்றுள்ளார் மம்தா பானர்ஜி.

 2021 சட்டப்பேரவை தேர்தலில் மேற்குவங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.பாஜக விடம் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் விதமாக புதுவிடிவு காலம் பிறக்கும் என்று பேசியிருக்கிறார் மம்தா பானர்ஜி. 

The next government in West Bengal is Nanga ..! Mamta Banerjee is gathering! BJP's dream will not come true!

"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசாங்கத்தின் மீது கடுமை காட்டி பேசியிருக்கிறார்.  நாடு முழுவதும் அச்சத்தின் ஆட்சி இருப்பதாகவும் அந்த அச்சத்தின் காரணமாக மக்கள் பேச முடியவில்லை' பாஜகவை 'வெளியாட்களின்' கட்சி என்று அழைத்த பானர்ஜி, மேற்கு வங்கத்தை வழி நடத்த அவர்களுக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது. மத்திய அரசு எங்களை புறக்கணித்துள்ளது. மேற்கு வங்க மக்கள் அவர்களுக்கு பொருத்தமான பதிலைக் கொடுப்பார்கள். வெளியாட்கள் மாநிலத்தை வழி நடத்த மாட்டார்கள். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத சிலர் மக்களைக் கொல்வதையும், தீக்குளிப்பதைப் பற்றியும் பேசுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் வன்முறை இருப்பதாகக் கூறி எனது ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு சதி செய்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் என்ன நடக்கிறது? அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளிக்க பயப்படுகிறார்கள். ஒரே சம்பவத்தில் பல போலீசார் கொல்லப்பட்டனர்.மத்திய அரசு 'மேற்கு வங்கத்தின் வளங்களை இழந்துவிட்டது, மக்கள் அநீதிக்கு பொருத்தமான பதிலைக் கொடுப்பார்கள் அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

The next government in West Bengal is Nanga ..! Mamta Banerjee is gathering! BJP's dream will not come true!
 பானர்ஜியை பதவி நீக்கம் செய்வதாக பாஜக உறுதி அளித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில், மாநிலத்தின் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக வென்றது, இது வங்காளத்தின் கட்சியின் மிக உயர்ந்த வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்த முறையும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும்.திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்தை அமைக்கும். அடுத்த தேர்தல்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய திசையைக் காண்பிக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios