- Home
- Politics
- திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
குடும்பப் பாங்கான பிம்பத்தைக் கொண்ட ஒரு தலைவர், விவாகரத்து மற்றும் மறுமணம் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினால், அது பெண்களின் வாக்குகளைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

முறியும் 27 ஆண்டுகால பந்தம்
தமிழக அரசியலில் 'தவெக' எனும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், தற்போது தனது சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய சுனாமியை எதிர்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இணையதளங்களை ஆக்கிரமித்து வரும் ஒரே செய்தி, விஜய் - சங்கீதா விவாகரத்து. விஜய் - திரிஷா திருமணம் என்பதுதான். 27 ஆண்டுகால பந்தம் முறியும் நிலைக்கு வந்துள்ளதும், அதற்கு கைமாறாக கொடுக்கப்படும் கோடிக்கணக்கான செட்டில்மெண்ட் தொகையும் கோலிவுட் வட்டாரத்தை உலுக்கி எடுத்துள்ளது.
சங்கீதாவின் போர்க்கொடி: 2021-ல் தொடங்கிய விரிசல்
லண்டனில் இருந்து வந்து விஜய்யின் தீவிர ரசிகையாக அறிமுகமாகி, அவர் வாழ்க்கைத் துணையானவர் சங்கீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ரகசியம்தான். இப்போது அந்த ரகசியம் நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதித்துள்ளது. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், "2021 முதல் ஒரு நடிகையுடன் விஜய்க்கு இருக்கும் தொடர்பு" தான் இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் என ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த 'மர்ம நடிகை' யார் என்பது ஊருக்கே தெரிந்தாலும், சட்டப்பூர்வமாக அவர் பெயர் இன்னும் வெளியாகவில்லை.
ரூ. 250 கோடி: வாயடைக்க வைக்கும் ஜீவனாம்சம்!
அரசியல் களத்தில் 'தூய்மையான' பிம்பத்தை நிலைநாட்ட துடிக்கும் விஜய்க்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால், நீதிமன்றத்தில் இழுத்தடிக்காமல் சுமுகமாகப் பிரிய விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்காக சங்கீதா மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சுமார் ரூ. 250 கோடி வரை செட்டில்மெண்ட் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். இந்த பிரம்மாண்ட தொகை, தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய 'ஜீவனாம்சமாக' பார்க்கப்படுகிறது.
திரிஷாவுடன் ஜோடி: ரகசிய திருமணம் எப்போது?
சங்கீதா உடனான விவாகரத்து பேச்சுவார்த்தை ஒருபுறம் நடக்க, மறுபுறம் நடிகை திரிஷாவுடன் விஜய் நெருக்கம் காட்டி வருவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, இருவரும் ஜோடியாக வந்து மணமக்களை வாழ்த்தியது அனைவரையும் வாயடைக்க வைத்தது. "விவாகரத்து உறுதியானதும், மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதியில் திரிஷாவை விஜய் கரம் பிடிப்பார்" என்ற பேச்சு தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியா?
விஜய்யின் இந்த அதிரடி முடிவுகள் அவரது அரசியல் பயணத்தை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடும்பப் பாங்கான பிம்பத்தைக் கொண்ட ஒரு தலைவர், விவாகரத்து மற்றும் மறுமணம் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினால், அது பெண்களின் வாக்குகளைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, சங்கீதா தரப்பு வைத்துள்ள 'நடிகை தொடர்பு' குற்றச்சாட்டு விஜய்க்கு ஒரு பெரிய கறையாக மாற வாய்ப்புள்ளது.
