Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்த கடிதம்..! முடிவு எடுக்க முடியாமல் திணறும் சோனியா.. ராகுல்காந்தி.!

காங்கிரஸ் கட்சிக்கு சவாலாகக் கருதப்பட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய இந்த கடிதம் ஒரு முக்கிய குழுவின் பல மாதங்கள் திட்டமிடல் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் உருவானது என  கடிதத்தில் கையொப்பமிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

The letter that made the Congress party see the game ..! Sonia unable to make decisions .. Rahul Gandhi.!
Author
India, First Published Aug 27, 2020, 9:05 AM IST

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று ஓராண்டு முடிவடைந்துள்ளது.

The letter that made the Congress party see the game ..! Sonia unable to make decisions .. Rahul Gandhi.!


சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். காங்கிரஸ்க்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு சவாலாகக் கருதப்பட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய இந்த கடிதம் ஒரு முக்கிய குழுவின் பல மாதங்கள் திட்டமிடல் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் உருவானது என  கடிதத்தில் கையொப்பமிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

The letter that made the Congress party see the game ..! Sonia unable to make decisions .. Rahul Gandhi.!

இதற்குரிய கூட்டங்கள் முக்கியமாக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரின் இல்லங்களில் நடந்ததாக தெரிகிறது..2020ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, மத்திய பிரதேச படுதோல்விக்குப் பிறகு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த கூட்டம் நடைபெற்றது. கமல்நாத் தலைமையில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்தி பாஜகவுக்கு மாறிய ராகுல் காந்தி விசுவாசி  ஜோதிராதித்யா சிந்தியா செயல்  கட்சிக்குள்ளேயே பலரைத் திணறடித்தது.

விவகாரங்களின் நிலை குறித்து கவலைப்பட்ட எங்கள் குழு, சோனியா காந்தியுடன் நேருக்கு நேர் சந்திப்பு  வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தது. இடைக்கால காங்கிரஸ் தலைவர் சந்திப்புக்கு அனுமதி வழங்காததால் ​​இந்த கடிதம் எழுதும் திட்டம் உருவாக்கப்பட்டது.எழுதிய கடிதத்தின் நகல் யாருக்கும் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் வீடியோ கால் மூலமாக படித்துக்காட்டப்பட்டது.ஜூன்-ஜூலை மாதங்களில் அதிருப்தி தலைவர்களின் எண்ணிக்கை 20 க்கு மேல் அதிகரித்தது. 

The letter that made the Congress party see the game ..! Sonia unable to make decisions .. Rahul Gandhi.!

முதல் கடிதத்திற்கு பதில் எதுவும் இல்லாதபோது, ​​இரண்டாவது கடிதம்  ஒரு நினைவூட்டல் கடிதம் ஒரு வாரத்திற்கு பிறகு அனுப்பப்பட்டது. "கடிதத்தில் உள்ள கவலைகளை நிவர்த்தி செய்யாமல் எந்தவொரு குறிப்பிடத்தக்க முடிவையும் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த புதிய கடிதத்தில் கூறி இருந்தோம்.

The letter that made the Congress party see the game ..! Sonia unable to make decisions .. Rahul Gandhi.!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) கூட்டம் ஆறு மாதங்களில் அழைக்கப்படும் வரை சோனியா காந்தி இடைக்கால காங்கிரஸ் தலைவராக தொடருவார் என்று கட்சி தெரிவித்துள்ளது. கடிதத்தில் உள்ள குறைகளை ஆராய ஒரு குழுவை அமைக்கவும்

Follow Us:
Download App:
  • android
  • ios