தெலங்கானா ஆளுநர் பாஜக தலைவர் போல செயல்படுவது வருத்தமளிக்கிறது என்று ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் இருக்கிறார். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆளுநர் தமிழிசை அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழிசை பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியில், “நாட்டில் 80 சதவீத கொரோனா நோயாளிகள் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து பதிவாகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதில் தெலங்கானாவும் ஒன்று. தெலங்கானாவில் தினமும் 50-ல் தொடங்கி தற்போது 2500 நோயாளிகள் பதிவாகிறார்கள். கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்க ஐ.சி.எம்.ஆர். அனுமதித்தும், தெலங்கானா அரசு தயங்கியது. மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இது போதுமானது அல்ல.” என்று தமிழிசை தெரிவித்திருந்தார்.

