Asianet News TamilAsianet News Tamil

தற்போதைக்கு சுவாசக் கவசம் அவசியமில்லை.!! மக்கள் தைரியமாக இருக்கலாம்.!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி...

பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வந்த  1,088 பேர் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  சீனா ,  ஜப்பான் , தென் கொரியா , ஈரான், இத்தாலி , ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது  என அவர் தெரிவித்தார். 
 

tamilnadu health minister vijayabaskar says like , till now no danger tamilnadu fro corona don't wiring nose mask all to all
Author
Chennai, First Published Mar 9, 2020, 4:24 PM IST

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 1 லட்சத்து 22, 318  நபர்களை கண்காணித்து உள்ளதாகவும், தமிழக மக்கள்  சுவாச கவசம் அணியும் நிலை தமிழகத்தில்  ஏற்படவில்லை எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ்  தற்போது இந்தியாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது .  இந்தியாவில் சுமார் 42 பேர் இந்த வைரசுக்கு ஆளாகியுள்ளனர்.  இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன .  தமிழகத்திலும் வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் கட்டப்பட்டு வருகிறது . இந்நிலையில் வைரஸ் குறித்து அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட விரிவான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

tamilnadu health minister vijayabaskar says like , till now no danger tamilnadu fro corona don't wiring nose mask all to all

அதில் ,  வைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .  அதனையடுத்து  செய்தியாளர் சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  அப்போது பேசிய அவர்,   பள்ளிக்கூடங்கள் ,  தொழில் வளாகங்கள் ,  திரையரங்கம் ,  விமான நிலையம் ,  உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் .  சென்னை ,  கோவை ,  திருச்சி ,  ஆகிய மாவட்டங்களில் புறநகர் பகுதிகளில் தனிமைபடுத்தி சிகிச்சை வழங்கும் பிரிவுகளை (isolation ward) அமைக்க  உத்தரவிட்டுள்ளார் . கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள  விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் .  வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் .  சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது .  தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ,  சென்னை கிண்டியில் உள்ளதுபோல் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையம் தேனியிலும் அமைக்கப்பட்டு வருகிறது . 

tamilnadu health minister vijayabaskar says like , till now no danger tamilnadu fro corona don't wiring nose mask all to all

வெரும் சோப்பில் கை கழுவினால் மட்டுமே போதுமானது ,  அனைவரும் சுவாசக் கவசம் அணியவேண்டும் என்ற நிலை தமிழகத்தில் ஏற்படவில்லை.   பொதுமக்கள் சுவாசக் கவசம் அணிந்து பீதியை ஏற்படுத்த வேண்டாம் .  வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நலவாழ்வு துறை எடுத்துவருகிறது அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .  வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது .  இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வந்த  1,088 பேர் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  சீனா ,  ஜப்பான் ,  தென் கொரியா ,  ஈரான்,  இத்தாலி ,  ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது  என அவர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios