பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை... அவர்கள் தயவால் நான் இல்லை...!! எகிறி அடித்த வாசன்..!!
நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் . இந்த வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது . தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது.
பாஜக தயவால் எம்பி பதவி பெறவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார் . ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் . காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது . இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியுள்ளது . பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அதிமுக வாசனுக்கு எம்பி பதவி வழங்கியது என பேச்சு அடிபட்டது . இந்நிலையில் அத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள ஜிகே வாசன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் விவரம்:-
கட்சி தொடங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் , அதில் தமிழ் மாநில காங்கிரசுக்கு அதிமுக ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியது . ஆனாலும் நாங்கள் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். இந்நிலையில் ஆதிமுக ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எனக்கு வழங்கியுள்ளது . எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதிமுகவிடம் இதை வலியுறுத்திக் கொண்டே இருந்தோம் . இதற்காக நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை . இந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்ற அதிமுக இந்த பதவியை வழங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அதிமுகவுக்கு நன்றி... நான் எம்பி பதவி பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவியதாக சிலர் கூறுகின்றனர் , ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. தமிழகத்திலிருந்து எம்பியை தேர்வுசெய்ய அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் .
தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது அப்படி இருக்கும்போது அவர்கள் தயவால் நான் எப்படி மாநிலங்களவை எம்பி பதவி பெற்றேன் என கூறமுடியும் இதற்கோடையில் நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் . இந்த வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது . தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை சிறுபான்மையினர் பாதித்தால் அவர்களை காப்பாற்ற முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் . தேமுதிக மாநிலங்களவை எம்பி பதவி கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த வாசன் , உண்மையிலேயே அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார் .