விஜயகாந்த், வைகோ இருவரையும் முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்த களைப்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, இப்போது ரஜினியை முதல்வராக்கும் பணியில் இறங்கியுள்ளார். அகில இந்திய அளவில் சுப்பிரணியசாமி செய்யும் 'கண்ணியமான' அதே பணியை இவர் தமிழக அளவில் செய்ய முயற்சி செய்கிறார். இவ்வளவையும் அவர் எங்கே பேசுகிறார் என்றால், ‘துக்ளக்’ பொன்விழா மேடையில் பேசுகிறார்.
தமிழ் நாடு, இனம், மொழி ஆகியனவற்றிற்காக ரத்தம் சிந்தி, பாடுபட்டுச் சிறைக்குச் சென்று, பல தியாகங்களைச் செய்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தமிழருவி மணியனின் விருப்பம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

ரஜினிக்கு ஆதரவாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். திருச்சியில் நடந்த துக்ளக் விழாவில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிக்கு ஆதரவாகவும் திமுகவை விமர்சித்தும் பேசினார். என் மூச்சு அடங்குவதற்குள் தமிழகத்தில் விட்டு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியையும் நீக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்” என்று தமிழருவி மணியன் பேசினார். தமிழருவி மணியின் இந்தப் பேச்சுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன். இதுதொடர்பாக அவர் தனது முக நூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சில பத்திகள்:
“இரண்டு நாள்களுக்கு முன், வலையொளியில் திருச்சியில், தமிழருவி மணியன் பேசியதைக் கேட்டேன். "என் மூச்சு அடங்குவதற்குள், தமிழகத்தை விட்டு இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியையும் நீக்க வேண்டும், அதுதான் என் இலட்சியம்" என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய லட்சிய வெறி! இரண்டு கட்சிகளையும் நீக்கிவிட்டு, யாருடைய ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்? தமிழ் நாடு, இனம், மொழி ஆகியனவற்றிற்காக ரத்தம் சிந்தி, பாடுபட்டுச் சிறைக்குச் சென்று, பல தியாகங்களைச் செய்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

