முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு சொந்தமான தனி விமானத்தில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்கத்தா சென்றுள்ளார். இந்த தனி விமானத்தில் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பயணம் செய்கிறார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் இன்னும் பிஸியாகிவிட்டார். செயல் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று பணியாற்றுவார். இப்போது தலைவராகிவிட்டார் அவரைப் பிடிக்க முடியுமா என்ன- அவர் அத்தனை பிஸி.

அதுபோக அடுத்தடுத்து நாடாளுமன்றத் தேர்தல்…இடைத் தேர்தல் என அவரது பணி மிக அவசியமாகிவிட்டது. காங்கிரசுடன்… மம்தா பானர்ஜி கூட்டியுள்ள பாஜகவுக்கு எதிரான கூட்டணி… சந்திர பாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை என நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவராகிவிட்டார்.

இந்நிலையில்தான் பாஜகவுக்குஎதிராகநாட்டில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர்களின்ஆலோசனைக்கூட்டம்இன்றுகொல்கத்தாவில்நடைபெறுகிறது. மேற்குவங்கமுதலமைச்சர் மம்தாபானர்ஜிஏற்பாடுசெய்துள்ளஇக்கூட்டத்திலும், பேரணியிலும்கலந்துகொள்வதற்காகதிமுகதலைவர்மு..ஸ்டாலின்தனிவிமானம்மூலம்நேற்று கொல்கத்தாபுறப்பட்டுச்சென்றார்.

முன்னாள்மத்தியஅமைச்சர்டி.ஆர்.பாலு, ஸ்டாலின்மருமகன்சபரீசன்மற்றும்நாகராஜன், சுனில்ஆகியோரும்ஸ்டாலினுடன்சென்றனர்.

ஸ்டாலின் கொல்கத்தா சென்ற அந்த தனி விமானம் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியின் உறவினருக்குசொந்தமானது.

திரிவேணிஎர்த்மூவர்ஸ் என்ற தனி விமானத்தில் அவர் கொல்கத்தா சென்றுள்ளார்.ஸ்டாலினின் பயண ஏற்பாடுகளைபத்ராநிறுவனம்செய்திருப்பதாகவும், விமானத்திற்குஒருமணிநேரத்திற்கானவாடகைநான்கரைலட்சம்என்றதகவலும்வெளியாகியிருக்கிறது.

கடந்தஆண்டு நவம்பர்மாதம்சேலத்தில்நடைபெற்றதன்னுடையஉதவியாளர்தினேஷ்திருமணத்திற்கும், இதேநிறுவனத்திற்குச்சொந்தமானதனிவிமானத்தில்தான்ஸ்டாலின்சென்றுவந்தார். தற்போது இரண்டாவது முறையாக எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு சொந்தமான இந்த விமானத்தில் ஸ்டாலின் இரண்டாவதுமுறையாகபயணம் செய்துள்ளார்..