ஸ்மார்ட்ஃபோன்கள் உதவியால்தான் அரசு அளிக்கும் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக ஸ்மார்ட்ஃபோன்கள் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாயு நாயுடு அறிவித்துள்ளார்.
இது தேர்தல் காலம் என்பதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் ஆளும் அரசுகளும் தங்கள் இஷ்டப்படி புதிய, புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்லின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்து 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,

அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலையும் கணக்கில்கொண்டுதான் இந்த விவசாயக் கடன் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் எதிர்வரும பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நாடாளுமன்ற மற்றும் 20 தொகுதிகளின் இடைத் தேர்தல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமராவதியில்புத்தாண்டுதினத்தைமுன்னிட்டுபேசியஆந்திரமுதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, ஸ்மார்ட்போன்களின்உதவியால்சாதாரணமக்களும்அரசின்ஆன்லைன்சேவைகளைப்பெறமுடியும். எனவேஅனைத்துக்குடும்பங்களுக்கும்ஸ்மார்ட்போன்கள்விநியோகிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா கடந்தநான்கரைஆண்டுகளில்சராசரியாக 10.52 சதவிகிதவளர்ச்சியைக்கொண்டிருந்தது. அதேநேரம், தெலங்கானாவின்வளர்ச்சிவிகிதம் 9.7 சதவிகிதமாகவும், தேசியசராசரி 7.3 சதவிகிதமாகவும்இருக்கிறது என்றார்.

மாநிலத்தின்பொருளாதாரவளர்ச்சி 2013-14ஆம்ஆண்டில் 4.64 லட்சம்கோடியிலிருந்து, 2017-18 நிதியாண்டில்ரூ.8.04 லட்சம்கோடியாகஉயர்ந்துள்ளது. இது 73 சதவிகிதவளர்ச்சியாகும். இந்த மாநிலத்துக்கு அதிகப்படியானவருவாய்பற்றாக்குறைஇருந்தாலும், தெலங்கானாவைவிடவேகமானவளர்ச்சியைபதிவுசெய்துள்ளோம்என பெருமிதத்துடன் தெரிவித்தார்
