9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக வரும் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் நீதித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வதுநாளாகஜாக்டோஜியோ அமைப்பினர் கோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்களுக்கு ஆதரவாக சென்னைத்தலைமைச்செயலகம்ஊழியர்கள்சங்கம்ஜாக்டோஜியோபோராட்டத்திற்குஆதரவுதெரிவித்து, வேலைநிறுத்தப்போராட்டத்தில்களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல்தமிழகநீதிமன்றஊழியர்கள்சங்கமும்ஜாக்டோஜியோபோராட்டத்திற்குஆதரவாகக்கைகோர்க்கஉள்ளதுஎன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கிராமநிர்வாகஅலுவலர்கள், சாலைப்பணியாளர்கள், அரசுக்கருவூலஊழியர்கள், மருத்துவத்துறையினர்உட்பட 56 துறையைச்சார்ந்தசங்கங்களும்போராட்டக்களத்தில்ஒன்றுசேரவுள்ளது.
இதனிடையே இன்று முதல் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். வரும் 1 ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் இவர்களின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
