Asianet News TamilAsianet News Tamil

கட்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது - குடும்பத்தினருக்கு சசிகலா எச்சரிக்கை

sasikala ordered-to-family
Author
First Published Dec 11, 2016, 1:21 PM IST


தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த போது    அவரது உடலை சுற்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்கள் இருந்தது  சமூக  வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் சுமார் 30 ஆண்டுகள் தோழியாக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரை பொதுச் செயலாளர் ஆக்க முயற்சி நடக்கிறது

sasikala ordered-to-family

முதல் அமைச்சர் ஜெயலலிதா தோழி சசிகலா தனது நெருங்கிய உறவினர்கள், சகோதரர்கள், மைத்துனர்கள் மற்றும் , சகோதரர்களின் மகன் மகள்களுக்கு அரசு நிர்வாகம் மற்று கட்சி நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளார் .சசிகலாவின் இந்த அதிரடி உத்தரவை கேட்டதும் அவரது உறவினர்கள், அதை ஏற்றுக் கொண்டனர்.  என சசிகலா உறவினர்கள் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது

மேலும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சசிகலா கடந்த புதன் கிழமை போயஸ் கார்டனில் கூட்டிய   தனது குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தில்  இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.

sasikala ordered-to-family

ஒரு நாள் கழித்து   அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து தனது குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை ஏற்று கொள்ள வேண்டாம் அவர்களது கோரிக்கைகளை நீங்கள் ஏற்று எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று சசிகலா கேட்டுக் கொண்டார்.   என  உறவினர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சசிகலா  தொடர்ந்து  போய்ஸ் தோட்ட இல்லத்திலேயே தங்குகிறார். தற்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்குதான் உள்ளனர். அவர்கள் சென்ற பிறகுஅவரது அண்ணன் மனைவி இளவரசி சசிகலாவுடனேயே தங்குவார். என அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios