பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு
ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா பெங்களூர் பரப்பன அக்ஹரஹார சிறையில் இருந்து வருகிறார். அவரை மாதந்தோறும் டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். அதுபோல் இன்று
டிடிவி தினகரன் மட்டுமல்லாமல் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா மைத்துனர் எனப்பலரும் சசிகலாவை பார்க்க இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்துள்ளனர்.
திவாகரன் அம்மா அணியென்னும் தனிக்கட்சி தொடங்கியுள்ளார், மேலும் அவரின் மகன் ஜெயானந்த் தினகரன் கட்சி மனிதர்களை மதிப்பதே இல்லை என்றும், அவர் மக்களின் முன் நன்றாக நடித்து நல்ல தலைவர் என்று பெயரை பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் டிடிவி தினகரனின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த்தாக உள்ளது.
நடக்கும் சூழலை சசிகலாவிடம் டிடிவி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது