சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் உரிமையாளர் மரணம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!
சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, நகைக்கடைகளை பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்கடையும் பிரபலம்.
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் உரிமையாளர் பல்லாக்கு துரை (56) காலமானார்!
சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, நகைக்கடைகளை பல்வேறு ஊர்களில் நடத்தி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்கடையும் பிரபலம். இந்நிலையில் அதனை நடத்தி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் உரிமையாளர் பல்லாக்கு துரை காலமானார். உடல் நலக்குறைபாட்டால் மரமணமடைந்த அவருக்கு வயது 56.
சென்னை சரவணா ஸ்டோர் நிறுவனம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் கட்டாததால் கரூர் வைஸ்யா பேங்க் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பராதார்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டார்கள் கருர் வைஸ்யா வங்கியிலிருந்து 162.80 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு, இன்னும் திருப்பி செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான பல்லாகு துரை, சுஜாதா மற்றும் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.