சித்தியுடன் அசத்தலாக ஆஜரான சித்தப்பு சரத்குமார்
சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமக நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடு அலுவலகங்கள் என 35 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரம்பித்த வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை மறுநாள் காலை வரை தொடர்ந்து நடந்ததில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது.
இந்த அதிரடி சோதையின்போது கைப்பற்றப்பட்ட பணம், சில முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
சுமார் ஒருமணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், விசாரணை முடித்துவிட்டு சரத்குமார் தனது காரில் நேராக தேனாம்பேட்டையிலுள்ள அவரது மனைவி ராதிகாவின் ராடன் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவருடனே வருமானவரித்துறை அதிகாரிகளும் வந்துள்ளனர்.
ராடன் நிறுவனத்திற்கு வந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர், அப்போது வங்கி கணக்குகள், சில ஆவணங்கள் சரத்குமார் பேரிலும் இருந்ததாம் இதனையடுத்து தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, விசாரணைக்கு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை ராதிகா, சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கத்திலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.