சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என  பக்தர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், இன்று மலையேற முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் தான் அவர்கள் என தெரிந்ததும் பக்தர்கள் கொந்தளித்துப் போயினர்.

அதுவும் ரஹானா ஃபாத்திமா கொஞ்சம் கூட பக்தி பயமின்றி ஜாலியாக தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டே கோவிலுக்குள் நுழைய முயன்றது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குபலரும்ஆதரவும், இந்துஅமைப்புகள்பலர்எதிர்ப்பும்தெரிவித்துவருகின்றனர்

இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில்நடைதிறக்கப்பட்டதைதொடர்ந்துஇந்தவிவகாரம்பூதாகரமானாது. கோவிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபோராட்டக்காரர்கள்காலில்விழுந்துமுறையிட்டுதிருப்பிஅனுப்பினர். மேலும், பெண்காவலர்கள்அங்குபணியாற்றவும்போராட்டக்காரர்கள்எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திராவைசேர்ந்தபெண்பத்திரிக்கையாளர்கவிதா மற்றும்பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரும் இன்று கருப்புஆடையுடன்இருமுடிசுமந்துகொண்டுசபரிமலைசென்றனர். அவர்கள் விரதம் எதுவும் இருக்கவில்லை என்றும் கோவிலுக்குள் உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சபரி மலைக்கு வந்திருந்தனர்.

அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்தனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது என கேரள அரசு உத்தவிட்டது. மேலும் சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் எனவும் கேரள அரசு கண்டிப்புடன் தெரிவித்தது. இதையடுத்து பக்தர்கள் அமைதியடைந்தனர்.

இந்நிலையில் ஃபாத்திமா ரஹானா அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விரதம் ஏதும் இருக்காமல் அவர் இருமுடி கட்டிக் கொண்டு வந்தது அய்யப்ப பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜாலியாக தர்பூசணி பழம் சாப்பிட்டுக் கொண்டு, கோவிலுக்கும், சாமிக்கும் எந்த மரியாதையும் கொடுக்காமல் அவர் வந்ததுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்கள் இருவரும் வம்புக்காகவே சபரிமலைக்கு வந்ததாகவே பக்தர்கள் கூறுகின்றனர். இதனிடையே பத்திரிக்கையாளர் கவிதா மற்றும்

பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோருக்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.