Asianet News TamilAsianet News Tamil

தலைவரே மே 23-க்கு பிறகும் உங்க ராஜ்ஜியம்தான்... சபரீசனை ரகசியமாய் சந்திக்கும் அதிகாரிகள்...!

மே 23-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி! எனும் நம்பிக்கையில் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பலர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ரகசியமாய் சந்தித்து மரியாதை வைக்க துவங்கியுள்ளனர்.

sabareesan Confidential officers
Author
Tamil Nadu, First Published May 10, 2019, 4:53 PM IST

* எங்களை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் வைத்து அழகு பார்த்த அம்மா, தெய்வமாக இருந்து எங்களைக் கண்காணிக்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோமா அல்லது கெடுதல் செய்கிறோமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் தவறு செய்வோமா?: ஓ.பன்னீர்செல்வம். (தலீவரே, இந்த டயலாக்கை நீங்க பேசிட்டு இருந்த இடம் மதுரை - தூத்துக்குடி ஹைவை பைபாஸ். அரை மணி நேரமா, தேசிய நெடுஞ்சாலையை மறிச்சு, மக்களை வதைச்சு பிரசாரம் பண்றதுக்கு பேருதான் உங்க ஊர்ல ‘மக்களுக்கு நல்லது பண்றதா?’)

* மே 23-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி! எனும் நம்பிக்கையில் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பலர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ரகசியமாய் சந்தித்து மரியாதை வைக்க துவங்கியுள்ளனர்: செய்தி. (இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதானே எல்லா கட்சிக்காரன் முதுகையும் புண்ணாக்குறாய்ங்க. இதே டீம்தான் எடப்பாடியாரிடமும் ‘தலைவரே மே 23-க்கு பிறகும் உங்க ராஜ்ஜியம்தான்.’ன்னு சாக்லேட் கொடுத்து சால்ரா தட்டியிருக்கு. அதை முடிச்சுட்டுதான் நேரா சபரிக்கிட்ட வந்திருப்பாய்ங்க.)

* தமிழக பி.ஜே.பி.யை பொறுத்தவரைக்கும் நான் ரொம்பவே ஜூனியர். ஆனாலும் என்னை மதித்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது கட்சி. அதற்கு நன்றி உடையவனாகவே எப்போதும் இருப்பேன்: நயினார் நாகேந்திரன். (ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க அண்ணே. ’என்னை  மதிச்சு’ன்னு சொல்றதைவிட ’என் கையில்  இருக்கிற  இருக்குற மாளவே மாளாத சொத்தை மதிச்சு சீட் கொடுத்தாங்க’ன்னு சொல்லிப்பாருங்க. கணக்கு கரெக்டா வரும்)

* நான் தென்சென்னை அல்லது நெல்லையில் நிற்க விரும்பினேன். ஆனால் அதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு போனதால் நான் தூத்துக்குடியில் நின்றேன். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெல்வேன்: தமிழிசை (இப்படி வெளிப்படையா பேசுறதுக்கும் ஒரு தகிரியம் வேணும். ஆனாலும் பல அதிருப்திகளை சொல்லி அப்புறமா ‘குறைந்த வாக்கு வித்தியாசத்தில்’ன்னு சொல்றதை பார்த்தா அக்கா எதையோ அட்வான்ஸ்டா சொல்ல வர்ற மாதிரி தெரியுதே?)

* சிறை மீண்ட பின் தியாகத்தலைவி சின்னம்மாவிடம் அ.தி.மு.க. முழுமையாக வந்தடையும் சூழல் வந்தால், அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்த வழி காட்டுவார். காரணம், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது: பெங்களூரு புகழேந்தி. (சசி, பத்து வருஷம் போட்டியிட முடியாதா? இன்னொரு முறை சொல்லுங்க, அட இன்னொரு முறை சொல்லுங்க. ஆக ராஜமாதா சசிகலா, ஆட்சிக்கு வழிகாட்டிட பராக் பராக்!-ன்னு சொல்லுங்க)

Follow Us:
Download App:
  • android
  • ios