Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைத்தே தீருவோம்...!! பச்சத் தண்ணிய குடிச்சுட்டு பல்லு குத்திய பிரேமலதா...!!

தொடர்ந்து பேசிய அவர்,   கூட்டணி தர்மத்தை தேமுதிக மட்டுமே கடைபிடிக்கிறது ,   குட்டக் குட்டக் குனியும் சாதி தேமுதிக இல்லை.  நாங்களும் மீண்டு எழுவோம்

premalatha vijayakanth says vijayaganth to be chief minister in feature
Author
Chennai, First Published Jan 31, 2020, 2:49 PM IST

விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதே எங்கள் நோக்கம் என்ன பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .  அவரது பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .  அதிமுக ,  திமுகவுக்கு மாற்று என கட்சி தொடங்கிய விஜயகாந்த் ஒருகட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தார் . எந்த அதிமுகவால் எதிர்க்கட்சித் தலைவரானாரோ அதே அதிமுகவால் அவரது கட்சி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.   அதைத்தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு ,  கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கொஞ்ச கொஞ்சமாக கட்சி கலகலத்துப் போனது . 

premalatha vijayakanth says vijayaganth to be chief minister in feature

தற்போது வரை தேமுதிக  பத்தோடு பதினொன்று என்ற நிலையிலேயே இருந்து வருகிறது . ஆனாலும் மீண்டும்  பழைய செல்வாக்கை அடையவேண்டும் ,  சரிவிலிருந்து மீண்டு வரவேண்டும் என தேமுதிக போராடி வருகிறது .   இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக ஓரளவுக்கு கௌரவமான வெற்றியை பெற்றுள்ளது .  இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற தேமுதிக பிரமுகர்களுக்கு  பாராட்டு தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .  அதில் பேசிய விஜயகாந்த நான் மீண்டும் வருவேன் மக்களுக்கு நன்மை செய்ய விரைவில் வருவேன் என்று கூறினார் .  அதைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் ,  எங்களது திருமண நாளை உங்களோடு கொண்டாடும் வகையில் தான் இந்த பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

 premalatha vijayakanth says vijayaganth to be chief minister in feature

தொடர்ந்து பேசிய அவர்,   கூட்டணி தர்மத்தை தேமுதிக மட்டுமே கடைபிடிக்கிறது ,   குட்டக் குட்டக் குனியும் சாதி தேமுதிக இல்லை.  நாங்களும் மீண்டு எழுவோம் எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் .  தேமுதிகவுக்கு இனிமேல் வளர்பிறை தான் வெற்றி முகம்தான் விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தில் வலம் வருவார் .  விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி  அமைப்பதே எங்கள் லட்சியம் என தெரிவித்த அவர் ,  2011 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக நிற்கப் போகிறோமா.?  தனியாக நிற்கப் போகிறோமா.? என்பதை விஜயகாந்த் உரிய நேரத்தில் தெரிவிப்பார் என ஆவேசமாக பேசினார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios