சிக்கன் சாப்பிட்டு அதை மட்டும் நிரூபித்தால் போதும்...!! ஒரு கோடி பரிசு..!!
இந்நிலையில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படுமென கோழிப்பண்ணை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது . முட்டை மற்றும் கோழி இறைச்சி வரலாறு காணாத அளவுக்கு தேக்கம் அடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இந்த வைரஸ் பரவியபோது அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது . இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து இந்தியாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது . கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது .
இந்நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்டவைகளை வாங்குவதை மக்கள் வெகுவாக தவிர்த்துவிட்டனர். இதனால் பிராய்லர் கோழி இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்டவைகள் தேக்கம் அடைந்துள்ளன . எனவே குறைந்த விலையில் சிக்கன் விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது . அதே நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கோழிப்பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பல்வேறு விழிப்புணர் பிரச்சாரங்களை அச்சங்கத்தில் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து முட்டை கோழி பணியாளர் வர்த்தக சங்க நிர்வாகி சுப்பிரமணியன் கூறுகையில் , கொரோனா பீதி காரணமாக நாமக்கல்லில் 12 கோடி முட்டைகள் தேக்கம டைந்துள்ளன . பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மேலும் நாலு கோடி முட்டைகள் தேக்கம் அடையும் நிலை உருவாகியுள்ளது, அதாவது கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்க தயாராக உள்ளோம் . ஒரு கிலோ 90 க்கு விற்பனையான கறிக்கோழி தற்போது 50க்கு கீழ் இறங்கிவிட்டது . இதற்கு காரணம் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுவது தான் , வதந்தி பரப்பிய 4 பேரை கைது செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்களது மனமார்ந்த நன்றி என அவர் தெரிவித்தார்.