தமிழகத்தில் 13.78 லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.  

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால், அதையொட்டி தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, 80 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் பீகாரில் நடந்த முடிந்த தேர்தலில் இதே முறை பின்பற்றப்பட்டது. இறுதியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தபால் வாக்குகள் தீர்மானித்தன. சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 15 தொகுதிகளை பாஜக கூட்டணியிடம் ஆர்ஜேடி கூட்டணி இழந்தது. இதனால், ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. எனவே, தேர்தல் நடத்தும் அதிகாரி நேரிடையாக சென்று வாக்குகளைப் பெறும் முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.