Asianet News TamilAsianet News Tamil

10 அம்மாவாசைகளில் திமுக அரசு கவிழும்... ஜோசியம் சொல்லும் பொள்ளாச்சி ஜெயராமன்!!

10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

pollachi jeyaraman says that admk will ascend the throne within 10 months
Author
Coimbatore, First Published Dec 7, 2021, 9:03 PM IST

10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொணடனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும் என்றும் அதிமுக பல கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

pollachi jeyaraman says that admk will ascend the throne within 10 months

மேலும் அதிமுக மக்களால் தொடங்கப்பட்ட கட்சி என்று கூறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பல பொய்களை கூறி ஆட்சியை பிடித்தது திமுக என்றும் சொன்னதை செய்யாத திமுகவை கண்டித்து நாளை மறுதினம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுககாரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான் என்று குறிப்பிட்ட அவர், அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான் என்றும் தெரிவித்தார். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் தாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? என்று கேட்ட அவர், தாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

pollachi jeyaraman says that admk will ascend the throne within 10 months

தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருக்கான் வந்தாலும் சரி தங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்றும் தங்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஒருவரே போதும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை என்று கூறிய அவர், அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது என்றும் அதிமுக எதற்கும் அஞ்சாது அச்சப்படாது என்றும் தெரிவித்தார். எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவதாக கூறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், 10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும் எனவும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios