நடிகை ரோஜாவுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பும் அரசியல் கட்சிகள்.!! அதுக்கு இந்த வீடியோ தான் காரணம்.!!
ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ரோஜா. சித்தூர் மாவட்டம், நகரி தொகு எம்.எல்.ஏ வாக இருக்கிறார் நடிகை ரோஜா.
T.Balamurukan
ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ரோஜா. சித்தூர் மாவட்டம், நகரி தொகு எம்.எல்.ஏ வாக இருக்கிறார் நடிகை ரோஜா.கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில்,தன் தொகுதிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சென்ற ரோஜாவுக்கு மக்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ரோஜா. சித்தூர் மாவட்டம், நகரி தொகு எம்.எல்.ஏ வாக இருக்கிறார் நடிகை ரோஜா.கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில்,தன் தொகுதிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சென்ற ரோஜாவுக்கு மக்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் புதிய போர்வெல் ஒன்றை ரோஜா திறந்து வைத்துள்ளார். மேலும் ஊரடங்கு காலம் என்பதால் தொகுதி மக்களுக்கு மளிகைப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.இதற்காக, கிராமத்துக்கு வருகை தந்த ரோஜாவுக்கு, மக்கள் வரிசையாக நின்று பாதங்களில் மலர் தூவி வரவேற்றுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடியதற்கும், இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்திராவில் உள்ள அரசியல் கட்சிதலைவர்கள் ரோஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.