அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்

இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில், ’அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே போல விஷு பண்டிகை கொண்டாடும் மலையாள மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Scroll to load tweet…
இதனிடையே நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு இறுதி நாளை எட்டியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் உரையாற்ற இருக்கிறார். அப்போது இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
