மக்களின் கேள்விகளும் கமலின் அசத்தல் பதில்களும்...!
கேள்வி : எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிப்பீர்கள்?
பதில்: என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன்.
கேள்வி : ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் உங்கள் ஆட்சியில் வருமா?
பதில் : கண்டிப்பாக கிடைக்காது. வேலைவாய்ப்பு பெருக வேண்டும். வசதி வாய்ப்பு பெருக வேண்டும். நீங்களுக்கு மற்றவருக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாக வேண்டும்.
கேள்வி: ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா?
பதில்: எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை. தேவைகளுக்கு அனைத்தும் இங்கு உண்டு. எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும்.
கேள்வி: தமிழை காக்க என்ன வழி?
பதில்: நீயும் நானும் தமிழில் பேசினாலே போதும். தமிழ் அழியாது. எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழை மறக்காமல் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.
கேள்வி : உங்களுக்கு எந்த தலைவர் பிடிக்கும். வழிகாட்டி யார்?
பதில் : உங்களுக்கு பல சாமிகள் பிடிக்கிறது. நான் ஏன் என்று கேட்கிறேனா? அதுபோல் என்னையும் விட்டுடுங்களேன். எனக்கு பினராயி விஜயனை, அரவிந்த் கெஜ்ரிவால், காந்தி, அம்பேத்கார், நேரு, என நிறைய பேரை பிடிக்கும். மறைந்தவர்களை விட வாழ்ந்து செயலில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்.
கேள்வி: இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்?
பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன்.
கேள்வி: உங்கள் வாரிசுகள் அரசியலுக்கு வருவார்களா?
பதில்: நீங்கள் தான் என் வாரிசுகள். நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். என் பெண்கள் அவர்கள் விரும்பினால் வரட்டும். இல்லெயென்றால் இருக்கட்டும். அது அவர்கள் முடிவு.
கேள்வி: காவிரி பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: முறையான உரையாடல் நடந்தது என்றால் எந்த மாநிலத்திடமும் எதையும் பேசி பெற முடியும்.