அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்! என்று அக்கட்சியினராலேயே அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதையொட்டி சென்னையில் அ.தி.மு.க. சார்பாக அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர்! என்று அக்கட்சியினராலேயே அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதையொட்டி சென்னையில் அ.தி.மு.க. சார்பாக அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த அஞ்சலி ஊர்வலத்தில் சில முக்கியஸ்தர்கள் கருப்பு நிற சட்டையில் வரவில்லை, பெண் அமைச்சர்கள் வழக்கம்போல் டாம்பீகமாக வந்திருந்தனர், முக்கிய நிர்வாகிகள் சிரித்து பேசியபடி வந்தனர், அம்மாவின் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை, நன்றி இல்லை! என்று தொண்டர்களின் புலம்பல்கள் நிறைய. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


ஆனால் அதையெல்லாம் மீறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது, முதல்வர் எடப்பாடியாரின் இறுகிய, கவலை படர்ந்த முகம் தான். ஊர்வலத்தில் நடந்து வருகையில் அவரது கண்கள் கலங்கியும் இருந்ததாக மாநில நிர்வாகிகளாலேயே பேசப்பட்டது. சில அமைச்சர்கள் கூட முதல்வரின் கவலை முகத்தை சுட்டிக் காட்டி தங்களுக்குள் கிசுகிசுத்தனர். 
’அம்மாவின் இறப்பு துயரிலிருந்து எடப்பாடியாரால் இன்னமும் வெளியேற முடியவில்லை. அவரது கண்களே கலங்கிவிட்டது பாருங்க. என்னதான் இன்று முதல்வரா இருந்தாலும், அவரு அம்மாவின் எளிய தொண்டன் தான் என்றும் அப்படின்னு நிரூபிச்சுட்டாரே!’ என்று தொண்டர்களும் உருகினர். இந்த நிலையில்தான் எல்லோருடைய மொபைல் வாட்ஸ் அப்புக்கும் வந்த அந்த போட்டோவும், செய்தியும் அ.தி.மு.க.வினரை அலற வைத்தது. 


ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் தலைமை புள்ளியுமான எடப்பாடியாரின் தம்பியையே தி.மு.க.வுக்கு இழுத்து அதிரடி அந்த பண்ணிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள். இப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாய்ந்து கேட்கும் கேள்வி, ‘ஓ! தம்பி தடம் மாறுனது முதல்வருக்கு தெரிஞ்சு போச்சு. அதனாலதான் அம்மாவின் அஞ்சலி ஊர்வலத்தில் இப்படி வருத்த முகம் காட்டினாரோ?’ என்பதுதான். 
அரசியல் டா