ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேனியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்துக்குள் புகுந்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆசிரியைகளை மிரட்டினர். இவ்வளவு சம்பளம் உங்களுக்குப் போதாதா என அவர்களிடம் கேள்வி எழுப்பி அச்சுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனிமாவட்டம்நேருசிலைஅருகேஇன்று 500 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக தேனிநகரச்செயலாளருமானகிருஷ்ணகுமார்மற்றும்சிலர்அங்கிருந்தஆசிரிளைகளைப் பார்த்து, இவ்வளவுசம்பளம் எங்களுக்கு போதாதா? மாணவர்களுக்குத்தேர்வுவரப் போகுது, ஒழுங்கா எல்லோரும் ஸ்கூலுக்கு போய் வேலை செய்யும் வழியைப் பாருங்க என மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் அதைச்சொல்லநீங்கள்யார்? நாங்கள்எங்கள்உரிமைக்காகப்போராடுகிறோம்எனஅங்கிருந்தஆசிரியர் – ஆசிரியைகள் கோரஸாக கூறினர்.

இதையடுத்து கடும் கோபமடைந்தஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆசிரியர்களுடன்வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில், வாக்குவாதம்முற்றியநிலையில்ஓபிஎஸ்ஆதரவாளர்கள், ஆசிரியர்களைமிரட்டினர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் கிருஷ்ணகுமார்உட்படஓபிஎஸ் ஆதரவாளர்கள்அனைவரையும்அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் போராடிய ஆசிரியைகளை மிரட்டியதாக கிருஷ்ணகுமார்உட்படஓபிஎஸ்ஆதரவாளர்கள்அனைவர்மீதும்போலீஸில்புகார்அளிக்க ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.