தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்ற ஓபிஎஸ், அவருடைய வெற்றிக்காக யாகங்களில் பங்கேற்றதாகச் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்த ஓபிஎஸ், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 4 இடைத்தேர்தல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுல்ள நிலையில் வாரணாசி சென்றிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம், பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றார். தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்ற ஓபிஎஸ், அவருடைய வெற்றிக்காக யாகங்களில் பங்கேற்றதாகச் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்த ஓபிஎஸ், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

