இன்னும் 6 மாதங்கள்தான்... எல். முருகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை... தமிழக பாஜகவின் திட்டம் இதுதானா..?
பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம்.
இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலைக்கு கோவியிலிருந்து செனை வரை வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘’பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம்.
தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார். 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.