சாமான்ய மக்களின் நிலையை அறிந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பபப் பெற வேண்டு என வலியுறுத்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொது மக்களின் சுமையை அதிகரிக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல், டீசல், கேஸ்விலைஉயர்வுக்குகண்டனம்தெரிவித்தும்பெட்ரோலியப்பொருட்களின்மீதானவரிகளைரத்துசெய்யவலியுறுத்தியும்நாடுமுழுவதும்எதிர்க்கட்சிகள்சார்பில்இன்று மாபெரும்பொதுவேலை நிறுத்தப்போராட்டம்நடைபெற்றது.

இதையொட்டிதமிழகம்முழுவதும்இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகளின்சார்பில்தமிழகம்முழுவதும்மறியல்போராட்டம்நடைபெற்றது. பொதுவேலைநிறுத்தப்போராட்டத்தில்நாடுமுழுவதும்உள்ளலாரிஉரிமையாளர்சங்கங்கள்உள்ளிட்டபல்வேறுஅமைப்புகளும்மத்தியதொழிற்சங்கங்களும்முழுமையானஆதரவைதெரிவித்திருந்தன.. தமிழகத்தில் 4.5 லட்சம்லாரிகள் 2.3 லட்சம்ஆட்டோக்கள் ஓடவில்லை.
தலைநகர்டெல்லியில்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திதலைமையில்பெட்ரோல், டீசல்விலைஉயர்வுக்குஎதிராககண்டனப்பேரணிநடைபெற்றது.

குஜராத்தில் முழு அடைப்பு காரணமாக பொது மக்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கினர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
ஆந்திரபிரதேசத்தில் சிபிஎம்கட்சியினர்போராட்டத்தில்ஈடுபட்டனர்.ஒடிசாவில்காங்கிரஸ்கட்சியினர்சம்பல்பூர்ரயில்நிலையத்தில்ரயில்மறியலில்ஈடுபட்டனர். ஒடிசாமாநிலம்புவனேஷ்வரில்எதிர்க்கட்சிகள்சாலைமறியலில்ஈடுபட்டனர். கர்நாடகாவில்பள்ளிகல்லூரிகளுக்குவிடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் தமிழக ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாமான்ய மக்களின் நிலையை அறிந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பபப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொது மக்களின் சுமையை அதிகரிக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்
