Asianet News TamilAsianet News Tamil

கொடைக்கானலில் இருந்து வந்த கையோடு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக்கொண்ட மு.க.ஸ்டாலின்..

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

MK Stalin injected with the 2nd dose of corona vaccine
Author
Chennai, First Published Apr 22, 2021, 12:41 PM IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இந்நிலையில், கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் இன்று காலை 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை காவேரி மருத்துவமனையில்  செலுத்திக் கொண்டார். 

MK Stalin injected with the 2nd dose of corona vaccine

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;- இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும்.

MK Stalin injected with the 2nd dose of corona vaccine

வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios