Asianet News TamilAsianet News Tamil

பா.ஜ.க.லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல பாஸ்! ஜஸ்ட் உதிரியாதான் அவங்கள நினைக்கிறோம்: செமத்தியாய் கலாய்ச்சுட்ட செல்லூர் ராஜு

அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டரின் பேச்சை ‘ஆணவ உச்சம்’ என்று  சூடான வார்த்தைகளில் விமர்சித்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவோ வழக்கமான தனது நக்கல் பாணியில், செம்ம காமெடியாக பா.ஜ.க.வை கலாய்ச்சிருக்கிறார். 
 

Minister Sellur Raj Insult Tamilnadu BJP
Author
Chennai, First Published Nov 27, 2019, 6:52 PM IST

அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்த மோதல் இப்போது அப்படியே திசை மாறி இருக்கிறது. அ.தி.மு.க.வின் கூட்டணிக்குள்ளே இப்போது கலவர காற்று வீச துவங்கியுள்ளது. தங்களை அசிங்கப்படுத்திப் பேசிய பா.ஜ.க.வின் தூதுவரை எதிர்த்து தாக்கிட அ.தி.மு.க.வுக்கு திராணியில்லை! என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இப்போது பதிலுக்கு பாய துவங்கிவிட்டது அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டரின் பேச்சை ‘ஆணவ உச்சம்’ என்று  சூடான வார்த்தைகளில் விமர்சித்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவோ வழக்கமான தனது நக்கல் பாணியில், செம்ம காமெடியாக பா.ஜ.க.வை கலாய்ச்சிருக்கிறார். 

Minister Sellur Raj Insult Tamilnadu BJP


எப்படி தெரியுமா?......கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், அத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதன் பின் மீடியாக்களை சந்தித்தவர்....“மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் மழையால், வெங்காயம் வரத்து பாதித்துள்ளது. இதனாலேயே விலை ஏற்றம் கண்டது. இப்போது வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழகத்தில் கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுகிறது.” என்று வெங்காயத்தில் பேச்சை துவக்கியவர் அப்படியே....“தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார். 

Minister Sellur Raj Insult Tamilnadu BJP

ஆனால் நாங்கள் அப்படி பேசுவதில்லை. தனிப்பட்ட நபர் அ.தி.மு.க.வினரை விமர்சித்து பேசுவதற்கெல்லாம் நாங்கள் முக்கியத்துவமே தருவதில்லை. நாங்கள் எதிரியாக பார்ப்பது தி.மு.க.வை மட்டுமே. மற்றவர்களெல்லாம் வெறும் உதிகள்தான். அவர்களுக்கு முக்கியத்துவமும் தருவதில்லை, கண்டுகொள்வதுமில்லை. எங்கள் கட்சியை முதல்வரும், துணை முதல்வரும்தான் இயக்கி வருகிறார்கள். வேறு யாரும் அ.தி.மு.க.வை வழிநடத்த வில்லை.” என்று அசால்டாக பேசியிருக்கிறார். 
இதன் மூலம், தங்களை மோசமாக சீண்டிய பா.ஜ.க.வை ‘உங்களையெல்லம ஒரு கட்சியாவை நாங்க மதிக்கல பாஸ்’ எனும் ரேஞ்சுக்கு செல்லூரார் கலாய்ப்பு பதிலடி தந்திருக்கிறார்! இது பா.ஜ.க.வுக்கு செம்ம நோஸ் கட்! தூதுவரான ஆடிட்டர் குருமூர்த்தி மூலமா நம்மை அசிங்கப்படுத்துன பா.ஜ.க.வை செல்லூரார் செவுள்ள அடிச்சு அனுப்பிட்டார்! என்று கொண்டாடுகிறார்கள் அ.தி.மு.க.வினர். ஓ இதுக்கு பேர்தான் திருப்பி அடிக்கிறதா! சொல்லவேயில்ல?

Follow Us:
Download App:
  • android
  • ios