3 பேரில் ஒருவர்தான் அதிமுக பொதுச்செயலாளர்.. கனவில் வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா - பரபரப்பை கிளப்பிய மேலாளர்
இவரது கனவில் வந்து அதிமுக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் ரத்த நாளங்களில் உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கருமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஆசிரமம் இந்த ஆசிரமத்தில் தலைமை பொறுப்பாளராக உள்ளவர் சரவணகுமார்
இவரின் கனவில் வந்த அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர், அதன் பிறகாக வந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்களும் இவரது கனவில் வந்து அதிமுக ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களின் ரத்த நாளங்களில் உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை
இந்த இயக்கத்திற்காக தற்பொழுது மற்றவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் உடனடியாக இருவரும் சமரசமாக போக வேண்டும் என்றும், இந்த இயக்கத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அல்லாத கலை துறையைச் சேர்ந்த ஒருவர் பொதுச் செயலாளராக வருவார் என்றும் அதனால் நீங்கள் சண்டையிடாமல் சமரசமாக செல்ல வேண்டும் என்றும் என்னிடம் கனவில் நேரடியாக வந்து தெரிவித்ததாக கூறினார்
ஓபிஎஸ் மீதும் இபிஎஸ் மீதும் நாங்கள் கடும் கோபத்தில் உள்ளோம் அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. புதியதாக ஒரு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்து அவர்களின் வழிமுறைப்படி ஓபிஎஸ்,இபிஎஸ் செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!
அம்மையார் ஜெயலலிதா எனது கனவில் வந்த பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு பரிந்துரை செய்த பெயர்களில் சசி என்ற பெயரையும் விவேக் என்ற பெயரையும் கலைத்துறையைச் சார்ந்த ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்து இவர்கள் மூன்று பெயர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று அவர் சொன்னதாக சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!