லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்கு இருக்கிறது. எனவேதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார். அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயல். 

திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கின்றேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்துக் காவல் துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. இந்தி மொழி இடம்பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு அதிமுக அரசும் துணையாக இருக்கிறது. முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள்.